சுதந்திர தினத்தன்று தாக்கப்பட்ட காவலர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழப்பு

By பிடிஐ

இந்திய சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் மீது தீவிரவாதிகள் தாக்கியதில் காயமடைந்த காவலர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார்.

தீவிரவாதிகள் ஸ்ரீநகரின் நோவட்டா பகுதியில் நடத்திய தாக்குதலில் காவலர் ரௌஸ் அகமது காயமடைந்தார். காயங்களுடன் போராடிய அவர், இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

காஷ்மீர், ஸ்ரீநகரின் நோவட்டா பகுதியில் இந்திய சுதந்திர தினத்தன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு மத்திய ரிசர்வ் படை வீரர் பலியானார். இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒன்பது பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

19 mins ago

தமிழகம்

23 mins ago

சினிமா

40 mins ago

தொழில்நுட்பம்

45 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்