பிரதமர் மோடியை இந்திய அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்று காங்கிரசும் பாகிஸ்தானும் விரும்புகின்றன என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று டெல்லியில் பேட்டியளித்தார். அப்போது பிரதமர் மோடியைத் தாக்கி பாகிஸ்தான் தலைவர்கள் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளை அவர் படித்துக் காட்டினார். மோடிக்கு எதிராக காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் சம்பித் பத்ரா கூறியதாவது:
ராகுல் காந்தியை பெரிய தலைவராக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தலைவர்கள் மற்றும் ஊழல், பரம்பரை ஆட்சி, ஓட்டு வங்கி அரசியலுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்தியாவில் உள்ள சிலரும் விரும்புகின்றனர். அதனால்தான் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறுகளைக் கூறி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்காக பாகிஸ்தான் தலைவர்கள் ட்விட்டர் மூலம் பிரச் சாரம் செய்கின்றனர். மோடிக்கு எதிரான தங்கள் கூட்டணியில் பாகிஸ்தானையும் காங்கிரஸ் சேர்த்துக்கொண்டு விட்டது.
நாட்டின் பாதுகாப்பு, ஊழ லுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றால் பாகிஸ்தானும் காங்கிரசும் விரக்தியடைந்துள் ளன. பிரதமர் மோடியை அரசிய லில் இருந்து அகற்ற காங்கிரசும் பாகிஸ்தானும் விரும்புகின்றன. ஆனால், சாதாரண மக்கள், தலித்துகள், ஏழைகள், சமூகத்தில் பின்தங்கிய மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே, மோடியை யாராலும் அகற்ற முடியாது. இவ்வாறு சம்பித் பத்ரா கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago