திருப்பதி பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்

By செய்திப்பிரிவு

திருப்பதி பிரம்மோற்சவ விழாவுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திர சீர்வரிசையை 11 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கவுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இவ்விழாவுக்குபட்டு வஸ்திரங்களை அரசு சார்பில் முதல்வர் காணிக்கையாக வழங்குவது மரபு.

சந்திரபாபு நாயுடு, கடந்த 2003-ம் ஆண்டு முதல்வராக இருந்த போது திருப்பதி பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக செலுத்த வந்தார். அப்போது, அலிபிரி மலைப் பாதையில் குண்டு வெடித்ததில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

இந்நிலையில் மாநில பிரிவினைக்குப் பின், இந்த ஆண்டு மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. 11 ஆண்டுகளுக்கு பிறகு அவர் அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

9 mins ago

வாழ்வியல்

14 mins ago

ஜோதிடம்

40 mins ago

க்ரைம்

30 mins ago

இந்தியா

44 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்