காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By பிடிஐ

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் இருவர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், ஹண்ட்வாரா பகுதியில் கலூரா என்ற இடத்தில் இன்று காலை இச்சம்பவம் நடைபெற்றதாக காவல் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கலூரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்புப் படைகள் ஒரு தனிப்படையை இன்று அதிகாலை அங்கு அனுப்பி வைத்தது.

பாதுகாப்புப் படையின் தனிப்படைப் பிரிவு தேடுதல் வேட்டையில் இறங்கியதை அறிந்த தீவிரவாதிகள் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர் எந்தத் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தேடுதல் வேட்டை மேலும் தொடர்வதாக காவல் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்