ஆதார் அட்டை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மறுக்கக் கூடாது என்று ஆதார் வழங்கும் யுஐடிஏஐ நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து ஆதார் நிறுவனம் மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில், ''ஆதார் அட்டை இல்லை என்பதால் சில பள்ளிகள் மாணவர்களைச் சேர்க்க மறுத்து விடுகின்றன.
ஆதார் அட்டை இல்லை என்பதைக் கூறி மாணவர் சேர்க்கையை மறுக்கக்கூடாது. சட்டப்படி அது தவறானது மற்றும் அந்த செயல் செல்லாது.
மாணவர்கள் ஆதாரைப் பெறும்வரை மற்ற வகையான அடையாள அட்டைகளைப் பெற்று சேர்க்கைகளை அனுமதிக்க வேண்டும்.
பள்ளிகளே உள்ளூர் வங்கிகள், தபால் நிலையங்கள், மாநிலக் கல்வித்துறை ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பு முகாம்களை தங்கள் வளாகங்களில் நடத்தலாம். அதன்மூலம் ஆதார் அட்டையைப் பெறுவது, தவறுகளை நீக்கி சரியான ஆதார் அட்டையைப் பெறுவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்'' என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, ஆதார் அட்டை வாங்குவதிலும் அதனால் மாணவர் சேர்க்கையிலும் சிரமங்களைச் சந்தித்த பெற்றோரை நிம்மதியடையச் செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago