பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிபதியிடம் அறிக்கை கேட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பாஜக தலைவர்கள் மீதான வழக்கை குறித்த காலத்துக்குள் முடிப்பது பற்றி அறிக்கை அளிக்க விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அயோத்தியில் பிரச்சினைக் குரிய இடத்தில் கட்டப்பட்டிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 13 பேர் மீதான வழக்கு உத்தரபிரதேசத்தின் லக்னோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை 2019-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதிக்குள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது. விசாரணை நடத்தும் நீதிபதியை மாற்ற வேண்டாம் என்றும் தினசரி அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

விசாரணை இன்னும் முடி வடையாத நிலையில், லக்னோ செஷன்ஸ் நீதிபதி எஸ்.கே.யாதவின் பதவி உயர்வுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் எஸ்.கே.யாதவ் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த ஆர்.எப். நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச், ‘‘2019-ம் ஆண்டு ஏப்ரலுக்குள் குறித்த காலத்தில் வழக்கை முடிக்க எப்படி முடிக்கப்போகிறீர்கள்? அதற்காக என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? என்பது பற்றி மனுதாரர் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக உத்தரபிரதேச அரசும் பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

சினிமா

11 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

31 mins ago

வாழ்வியல்

50 mins ago

சுற்றுலா

53 mins ago

வணிகம்

6 hours ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்