அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களைத் தடுக்க சமூக மாற்றம் அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டில் 9 மாநிலங்களில் 40 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வெங்கய்ய நாயுடு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மதம், சாதி, நிறம், பாலினத்தின் அடிப்படையில் ஒருவரை கொலை செய்பவர்கள் தேசியவாதி கிடை யாது. கும்பலாக சேர்ந்து ஒருவரை அடித்துக் கொலை செய்வதை எந்தவொரு கட்சியுடனும் தொடர்பு படுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சமூக மாற்றம் அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பசு பாதுகாவலர் படை மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்பி ஆங்காங்கே கும்பல் கும்பலாக சேர்ந்து தாக்கு தல் நடத்தியதில் அப்பாவிகள் சிலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
23 mins ago
தமிழகம்
13 mins ago
இந்தியா
1 hour ago
கல்வி
26 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
28 mins ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
59 mins ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
3 hours ago