மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-ம் முறையாக பதவியேற்றுள்ளது. இந்நிலையில் உளவு (ஐபி), ‘ரா’ பிரிவுகளுக்கு புதிய தலைவர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி உளவுப் பிரிவுக்கு 1984-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அர்விந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் முதன்மையாக விளங்கும் உளவுப் பிரிவின் தலைவராக உள்ள ராஜீவ் ஜெயினின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து அர்விந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதைப் போலவே ‘ரா’ பிரிவுக்கு சாமந்த் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாவார். ‘ரா’ பிரிவின் தலைவராக இருக்கும் அனில் தஸ்மனாவின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. இதைத் தொடர்ந்தே புதியதலைவராக சாமந்த் கோயல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்களுக்கு மத்திய அமைச்சரவை நியமன குழு (ஏசிசி) ஒப்புதல் அளித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஆன்மிகம்
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
விளையாட்டு
3 hours ago