அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல்கள்: அமித் ஷா தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து விரைவில் பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறம் நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்கண்ட், டெல்லி உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் பணிகளை பாஜக இப்போதே தொடங்கியுள்ளது. இதில் தேசிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாஜக  தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பாஜக கட்சி விதிகளின்படி தலைவர் அமித் ஷாவிற்கு கடந்த ஜனவரி மாதத்திலேயே பதவிக் காலம் முடிவுக்கு வந்தது. எனினும், மக்களவைதத் தேர்தலுக்காக அவருக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டது. அமித் ஷா தற்போது  உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் தலைவராகலாம் என கருதப்படுகிறது. இதுபற்றியும் இன்றையக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்