உத்தரப் பிரதேசத்தில் ஷாஜகான்பூர் அருகே ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவரிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார்.
மதனாப்பூர் பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்கு படித்துவந்த மாணவி ஒருவரின் முன்னால் இந்த ஆசிரியர் ஆபாசமாக செயல்பட்டுள்ளார். அம்மாணவி 14 வயதான தலித் பெண் என்றும் கூறப்படுகிறது.
ஆசிரியரின் செயலால் அதிர்ச்சியடைந்த மாணவி தன் வீட்டிற்குச் சென்ற பின் அங்குள்ளவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்கள் கிராமத்தினரை அழைத்துக்கொண்டு மாணவியின் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர். அங்கு ஆபாசச் செயலில் ஈடுபட்ட ஆசிரியரை அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்த போலீஸார் பள்ளிக்கு விரைந்து வந்து ஆசிரியரைக் கைது செய்தனர். அவர் மீது எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உதவி காவல் கண்காணிப்பாளர் தினேஷ் திரிபாதி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 mins ago
ஜோதிடம்
38 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago