லெனின் ஒரு தீவிரவாதி- சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை கருத்து

By ஏஎன்ஐ

 திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி வரும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, லெனின் ஒரு தீவிரவாதி என கூறியுள்ளார்.

திரிபுராவில் பெலோனியா கல்லூரி சதுக்கத்திலுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் வைக்கப்பட்ட புரட்சியாளர் லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பாஜக ஆதரவாளர்கள் அகற்றினர்.

இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பாஜகவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் லெனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''லெனின் வெளிநாட்டுக்காரர்! அவர் ஒருவர் தீவிரவாதி. நம் நாட்டில் அவரது சிலையை ஏன் வைக்க வேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுக்கு விருப்பம் என்றால், தங்களது கட்சி அலுவலகங்களில் லெனின் சிலையை வைத்து வழிபாடு நடத்தட்டும்'' எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்