ஜனவரி 1-க்குப் பிறகு 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்வதற்கு அனுமதிக்கலாமா?- தேர்தல் ஆணையத்துக்கு மத்திய அரசு யோசனை

By செய்திப்பிரிவு

‘‘பதினெட்டு வயதை அடைந்தவுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்ய ஆண்டு முழுவதும் அனுமதி வழங்குவது சாத்தியமா?’’ என்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் மத்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளது.

தற்போது ஜனவரி 1-ம் தேதி 18 வயதை அடைந்தவர்கள் மட்டும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் 18 வயதை அடைந்தாலும், உடனடியாக வாக்காளராகப் பதிவு செய்ய முடியாது. அதற்கு அடுத்த ஆண்டுதான் தங்களை வாக்காளராகப் பதிவு செய்ய முடியும்.

இந்தப் பிரச்சினையை தீர்க்க ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 என 4 தேதிகளை நிர்ணயிக்கலாம். இதன் மூலம் ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு பிறந்து 18 வயதை பூர்த்தியடைபவர்கள் எளிதாக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள முடியும் என்று தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், 4 தேதிகளுக்குப் பதில் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என 2 தேதிகளை நிர்ணயிப்பது நல்லது என்று கடந்த 2016-ம் ஆண்டு மத்திய சட்டத் துறை அமைச்சகம் கூறியது. அதற்கேற்ப வாக்காளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர மசோதாவும் தயாரிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் எப்போது 18 வயதை பூர்த்தியடைந்தாலும், உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆண்டு முழுவதும் அனுமதிக்கலாமா?

இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா என்று தலைமை தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு கேட்டுள்ளது.

ஆண்டுதோறும் 18 - 19 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஒரு கோடி பேர் சராசரியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கின்றனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்