சாத்வி பிரச்சாரத்துக்கு 72 மணி நேரம் தடை

By பிடிஐ

மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் சாத்வி பிரக்யா சிங் தாகுர் போட்டியிடுகிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான சாத்வி கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், “நான் சிறையில் இருந்தபோது போலீஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரே சித்ரவதை செய்தார். அப்போது அவருக்கு நான் சாபம் விட்டேன். இதனால் மும்பை தீவிரவாத தாக்குதலில் அவர் உயிரிழந்தார்” என சமீபத்தில் சாத்வி கூறியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து வருத்தம் தெரிவித்திருந்தார். இதுபோல, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்றதற்காக பெருமைப்படுகிறேன் என்று சாத்வி கூறியிருந்தார். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசி வருவதாக சாத்வி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. இதைப் பரிசீலித்து வந்த ஆணையம், சாத்வி 72 மணி நேரம் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று காலை 6 மணிக்கு அமலுக்கு வருகிறது. இனிமேல் இதுபோல பேசக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் சாத்விக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்