சமாஜ்வாதி கட்சித் தலைவர் லால்ஜி யாதவ் மர்ம நபர்களால் இன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜான்பூரை நோக்கி யாதவ் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது நடைபெற்றுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படையில், ''லால்ஜி யாதவ் தனது ஸ்கார்ப்பியோ காரில் உட்லி கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தார். அங்கு வேகத்தடை இருந்துள்ளதால் ஸ்கார்ப்பியோவின் வேகம் குறைந்துள்ளது. யாதவைப் பின் தொடர்ந்துவந்த 3 பைக்குகள் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டன. பைக்கில் இருந்த மர்ம நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே யாதவ் பரிதாபமாக உயிரிழந்தார். நேரில் பார்த்த சாட்சிகள் கூறும்போது, யாதவ் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே மர்ம நபர்கள் அந்த இடத்தை விட்டு விலகியுள்ளனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.
லால்ஜி யாதவ் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. அவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது அனைத்து காண்ட்ராக்ட் பணிகளையும் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு மூத்த காவல்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். லால்ஜி யாதவின் உடல், பிரதேசப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீவிர விசாரணைக்குப் பிறகே இந்த கொலைக்கான காரணம் தெரியவரும்'' என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக காஸிபூரில் சமாஜ்வாதி தலைவர்கள் விஜய் யாதவ், கம்லேஷ் பால்மீகி ஆகியோர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
28 mins ago
கல்வி
42 mins ago
சினிமா
50 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
54 mins ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
இந்தியா
2 hours ago