காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளரும் செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைய வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளரும் செய்தித் தொடர்பாளருமான பிரியங்கா சதுர்வேதி இன்று கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது கட்சி சார்ந்த அறிமுகங்களையும் ட்விட்டர் கணக்கிலிருந்து நீக்கினார்.
சில தினங்களுக்கு முன், உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர் கூட்டத்தின்போது தன்னிடம் தவறாக நடந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் மீண்டும் தன்னிடம் இதுபற்றி எதையும் கேட்காமல் மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளமையால் காங்கிரஸ் தலைமை மீது பிரியங்கா சதுர்வேதி ஏமாற்றம் அடைந்ததாக அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
தன்னிடம் தவறாக நடந்துகொண்டவர்கள் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர்களை சேர்த்துக்கொண்டது என்பது கட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் தனக்கு இதனால் மனம் மிகவும் புண்பட்டுள்ளது என்று தனது ராஜினாமாவில் பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிவசேனா கட்சி எம்பியும் கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் காங்கிரஸிலிருந்து விலகிய பிரியங்கா சதுர்வேதி விரைவில் சிவசேனாவில் இணைவது நிச்சயம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து பிரியங்கா தரப்பில் எதுவும் தெரிவிக்கவிக்கப்படவில்லை.
இதற்கிடையில் பிரியங்கா சதுர்வேதி விலகலால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவிக்கையில், இது காங்கிரஸுக்கும் பிரியங்கா சதுர்வேதிக்கும் இடையில் உள்ள பிரச்சினை என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
இந்தியா
16 mins ago
ஆன்மிகம்
34 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
சினிமா
3 hours ago