கேரளாவில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் பிஷப், பாதிரிமார்கள் யாரும் வரும் தேர்தலில் எந்த ஒரு அரசியல் சார்பு நிலைப்பாடு எடுக்க வேண்டாம் அது நம் அனைவருக்குமே திங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
பிஷப் மர் ஜான் நெல்லிகுன்னெல் இது குறித்து வெளியிட்ட சுற்றறிக்கையில், “நம் மக்களின் ஆன்மீகத் தலைவர்களாகிய நாம் எந்த ஒரு அரசியல் சார்பு நிலையும் எடுக்காமல் இருப்பது நல்லது, அப்படிப்பட்ட சார்பு நிலை நம் அனைவருக்குமே தீங்காக முடியும். தேர்தலில் யார் பக்கம் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அறிவுத்திறன் நம் மக்களுக்கு இருக்கிறது
கடவுளுக்கு முன் நம் அனைவருக்கும் கடமை உள்ளது, அதாவது ஒற்றுமை திருப்பணி ஆகியவற்றின் குறியீடுகளாகச் செயல்படும் கடமை நமக்கு உள்ளது. ஆகவே தேர்தல் ரீதியான பிரச்சாரங்களிலிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என்று முறையிடுகிறேன்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
2014 2014 லோக்சபா தேர்தலில் இதே பிஷப் சிபிஎம் ஆதரவு சுயேச்சை வேட்பாளரை ஆதரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago