கேரள மாநிலம வயநாட்டில் தனியார் ரிசார்ட்டில் புகுந்து பணம் கேட்டி மிரட்டிய மாவோயிட் தீவிரவாதி காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 3 அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பியோடி விட்டனர்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்தநிலையில், கோழிக்கோடு - மைசூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், நேற்று இரவு மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த சிலர் , தங்கும் விடுதிக்குள் புகுந்து அதன் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். மாவோயிஸ்ட்டுகள் கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் அதிரடிப்படையினரும் அந்த பகுதிக்கு விரைந்தனர்.
தொடர்ந்து அதிரடிபடையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் மாவோயிஸ்ட் ஒருவர் பலியானார். மற்ற 3 பேர் அங்கிருந்து தப்பியோடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளார்.
மாவோயிஸ்ட்டுகள் பற்றி விவரங்களை கேரள காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். கொல்லப்பட்டவரின் பெயர் ஜலீல் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது..
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
54 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
3 hours ago