இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் துணைத் தூதரை அழைத்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தி அழித்தன. இதில் பாலகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தன. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.
இதனை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு தெரிவித்தது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் ஒரு விமானத்தை சுட்டுவீ ழ்த்தியதாகவும், அதில் இருந்த விமானி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இரு நாட்டு அரசுகளும் தங்கள் பிரதமர் தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எங்களால் திருப்பித் தாக்க முடியும் என்பதை நிருபிக்க மட்டுமே பாகிஸ்தான் விமானங்கள் இன்று தாக்குதல் நடத்தின. தீவிரவாத பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
தற்போது டெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாகிஸ்தான் துணைத் தூதர் சையத் ஹைதரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
இந்தியா
11 mins ago
க்ரைம்
34 mins ago
இணைப்பிதழ்கள்
1 hour ago
உலகம்
44 mins ago
விளையாட்டு
1 hour ago
உலகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
1 hour ago