மக்களவை வளாகத்தின் செண்ட்ரல் ஹாலில் சோனியா காந்தியும் மம்தா பானர்ஜியும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த போது சோனியா காந்தி மம்தாவை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் வர மம்தா பானர்ஜி கோப வார்த்தைகளை வெளியிட்டார்.
மேற்கு வங்க காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ராஜன் சவுத்ரி சாராத சிட்பண்ட் ஊழலில் மம்தாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற ரீதியில் பேச சோனியா காந்தி மம்தாவை சமாதானம் செய்ய முயன்று ‘நாம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி கொண்டிருக்கிறோம், நாம் நண்பர்கள்’ என்று சோனியா கூற சமாதானத்தை ஏற்காத மம்தா பானர்ஜி ‘நாங்கள் இதனை நினைவில் வைத்துக் கொள்வோம்’ அதாவது காங்கிரஸ் உறுப்பினர் பேச்சை மறக்க மாட்டோம் என்ற தொனியில் சோனியாவிடம் கூறியதாக தனியார் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிதி மோசடிகளைத் தவிர்க்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறிய ஆதிர் ராஜன் சவுத்ரி, சாரதா சிட்பண்ட் ஊழலில் மம்தாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற ரீதியில் பேசினார். இவரது இந்தப் பேச்சை பாஜக உறுப்பினர்கள் கரகோஷம் செய்தும், நெஞ்சை அடித்துக் கொண்டும் வரவேற்றனர்.
சமீபத்தில் மம்தா பானர்ஜியிடம், காங்கிரஸ் கட்சியின் இரட்டை நாக்கு பற்றி கேட்ட போது, “நான் அது பற்றி கவலைப்படவில்லை, அது அவர்கள் உள்விவகாரம். மாநிலங்களில் நடப்பது வேறு விஷயம், ஆனால் இப்போதைக்கு தேச அரசியல்தான் முக்கியம், இதில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது முக்கியம்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago