காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By ஏஎன்ஐ

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படையினரால் 5 தீவிரவாதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து மாநில ஐஜி எஸ்.பி. பாணி தெரிவிக்கையில், ''கெல்லாம் ட்வாசார் பகுதிக்கு பாதுகாப்புப் படைகள் சென்றன. அங்கு இரு தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சண்டையின்போது 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் வெடிபொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன'' என்றார்.

இச்சண்டையில் வேறெந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்த எதிரிகளின் பாசறையும் அழிக்கப்பட்டதாகவும் அங்கிருந்து தீவிரவாதிகளின் சடலங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் மக்கள் சிலர் கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டதால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நால்வருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யாரென்று அடையாளம் காணப்படும் பணிகள் மேலும் தொடரும் நிலையில் தேடுதல் நடவடிக்கை இன்னும் தொடர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 mins ago

ஜோதிடம்

29 mins ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

மேலும்