நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி: புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்தார்

By செய்திப்பிரிவு

பிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்களும் வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

பிஹார் மாநிலத்தில் இருந்து கான்ஸ்டபிள் சஞ்சய் குமார் சின்ஹா மற்றும் ரத்தன் குமார் தாக்கூர் ஆகியோர் வீர மரணமடைந்தனர்.

இந்நிலையில் பிஹாரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி இனாயத் கான், புல்வாமா தாக்குதலில் பலியான இரண்டு வீரர்களின் மகள்களைத் தத்தெடுத்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அவர், ''அவர்கள் இருவருக்கும் தனியாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மார்ச் 10-ம் தேதி வரை அளிக்கப்படும் பணம் இருவருக்கும் சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படும். மக்கள் தங்களால் முடிந்த அளவு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தனிப்பட்ட வகையில் நான், வீரர் ஒருவரின் மகளுடைய கல்விச் செலவை ஏற்கிறேன். அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான செலவையும் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று இனாயத் கான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்