ஜாலியன் வாலாபாக் படுகொலை: பிரிட்டன் மன்னிப்பு கேட்க பஞ்சாப் மாநிலத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என பஞ்சாப் சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை விவகார அமைச்சர் பிரஹம் மொகிந்திரா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். கட்சிப் பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அப்பாவி போராட்டக்கரார்கள் படுகொலை செய்யப்பட்டனர். ரவுலட் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த உள்ளூர் மக்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுத்தது வெட்கக் கேடானது. இத்துயர சம்பவத்தின் நூற்றாண்டு நினைவை நாங்கள் அனுசரிக்கும் வேளையில், இந்திய மக்களிடம் பிரிட்டன் அரசு முறைப்படி மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

28 mins ago

வாழ்வியல்

24 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்