ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என பஞ்சாப் சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை விவகார அமைச்சர் பிரஹம் மொகிந்திரா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். கட்சிப் பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் அப்பாவி போராட்டக்கரார்கள் படுகொலை செய்யப்பட்டனர். ரவுலட் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்த உள்ளூர் மக்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுத்தது வெட்கக் கேடானது. இத்துயர சம்பவத்தின் நூற்றாண்டு நினைவை நாங்கள் அனுசரிக்கும் வேளையில், இந்திய மக்களிடம் பிரிட்டன் அரசு முறைப்படி மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
28 mins ago
வாழ்வியல்
24 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago