குஜராத்தின் பிரபல நாட்டுப்புற பாடகி கீதா பென் ராபரி. இவரின் இசை நிகழ்ச்சி நவசரி பகுதியில் நடைபெற்றது. அதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அப்போது பாட்டு பாடிக்கொண்டிருந்த கீதா ராபரியின் மீது பொதுமக்கள் பணத்தை வாரியிறைத்தனர்.
இந்திய நோட்டுகள் மட்டுமல்லாது அமெரிக்க டாலர்களும் அவரின் மீது வீசப்பட்டன. ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருமே பணத்தை வாரி இறைத்தனர். இதுதொடர்பான காணொலி இணையத்தில் வைரலானது.
வீசப்பட்ட பணத்தை எண்ணுவதற்கென்றே தனிக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. அதேபோல, பணத்தை எடுப்பதற்காக ஏடிஎம் மெஷின்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன.
இளம் குஜராத்திப் பாடகியான கீதா ராபரி, நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் பிரபலமானவர். இவர் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பாடல்கள் பாடி வருகிறார். வெளிநாடுகளிலும் இவர் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் 'ரோனா சேர் மா' பாடல், யூடியூபில் 19 கோடி பேருக்கும் மேலாகப் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
36 mins ago
இந்தியா
40 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago