கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி

By செய்திப்பிரிவு

கடந்த 2006ஆம் ஆண்டு மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்ல அனுமதி அளிக்குமாறு கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் கார்த்தி சிதம்பரம் தற்போது டென்னிஸ் போட்டி விஷயமாக வெளிநாடு செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இதனிடையே ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை வரும் பிப்ரவரி 18-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்று டெல்லியிலுள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

18 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்