தனது மனைவிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ஆபாசமாக குறுந்தகவல்களை அனுப்பிய இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அலிபூர்துவார் மாவட்ட கலெக்டர் நிகில் நிர்மல். இவரது மனைவி நந்தினி கிருஷ்ணன். இவருக்கு இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.
இது தொடர்பாக நந்தினி கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் போலீஸார் பினோத் சர்கார் என்ற நபரைக் கைது செய்தனர். இந்தத் தகவல் தெரிந்ததும் காவல் நிலையத்திற்கு ஆட்சியரும் அவரது மனைவியும் வந்தனர். ஆட்சியர் நிகில் நிர்மல் அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கினார்.
அப்போது அந்த அதிகாரியின் மனைவி காவலர்களிடம் பிரம்பு இருக்கிறதா எனக் கேட்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து நிகில் நிர்மல் நேற்றைய தினம் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
36 mins ago
ஆன்மிகம்
1 hour ago
கல்வி
59 mins ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago