மனைவியை ஆபாசமாக விமர்சித்த ஆசாமியை அடித்துத் துவைத்த ஐஏஎஸ் அதிகாரி

By ஏஎன்ஐ

தனது மனைவிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ஆபாசமாக குறுந்தகவல்களை அனுப்பிய இளைஞரை காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் அலிபூர்துவார் மாவட்ட கலெக்டர் நிகில் நிர்மல். இவரது மனைவி நந்தினி கிருஷ்ணன். இவருக்கு இளைஞர் ஒருவர் சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.

இது தொடர்பாக நந்தினி கிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் போலீஸார் பினோத் சர்கார் என்ற நபரைக் கைது செய்தனர். இந்தத் தகவல் தெரிந்ததும் காவல் நிலையத்திற்கு ஆட்சியரும் அவரது மனைவியும் வந்தனர். ஆட்சியர் நிகில் நிர்மல் அந்த இளைஞரை சரமாரியாகத் தாக்கினார். 

அப்போது அந்த அதிகாரியின் மனைவி காவலர்களிடம் பிரம்பு இருக்கிறதா எனக் கேட்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து நிகில் நிர்மல் நேற்றைய தினம் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

36 mins ago

ஆன்மிகம்

1 hour ago

கல்வி

59 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

மேலும்