ஆந்திராவில் 50 பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.குண்டூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணவேணி டேலன்ட் பள்ளி மாணவர்கள் 50 பேர் பேருந்தில் இன்று காலையில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின்மீது மோதி பேருந்து கவிழ்ந்தது. பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகளும் உணவுப் பைகளும் சிதறின. இதில் 15 மாணவர்கள் லேசாகக் காயமடைந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தை அடுத்து, அங்கிருந்த உள்ளூர் மக்கள் பேருந்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளை மீட்டனர். விபத்தில் காயமடைந்த குழந்தைகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநரின் அலட்சியமா?
விபத்தின்போது ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநரிடம் விபத்து குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 mins ago
ஜோதிடம்
26 mins ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
10 hours ago