ஆந்திராவில் பாலத்தின் மீது மோதிய பள்ளிப் பேருந்து: 3 குழந்தைகள் கவலைக்கிடம்; ஓட்டுநரின் மதுபோதை காரணமா?

By செய்திப்பிரிவு

ஆந்திராவில் 50 பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.குண்டூர் மாவட்டத்தில் திங்கட்கிழமை காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணவேணி டேலன்ட் பள்ளி மாணவர்கள் 50 பேர் பேருந்தில் இன்று காலையில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின்மீது மோதி பேருந்து கவிழ்ந்தது. பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகளும் உணவுப் பைகளும் சிதறின. இதில் 15 மாணவர்கள் லேசாகக் காயமடைந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தை அடுத்து, அங்கிருந்த உள்ளூர் மக்கள் பேருந்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளை மீட்டனர். விபத்தில் காயமடைந்த குழந்தைகள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுநரின் அலட்சியமா?

விபத்தின்போது ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து ஓட்டுநரிடம் விபத்து குறித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

22 mins ago

ஜோதிடம்

26 mins ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்