ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பிர் பாஞ்சல் பள்ளத்தாக்குப் பகுதியில் சாலையிலிருந்து தடம்புரண்ட பேருந்து ஒன்று பெரிய பள்ளத்தில் உருண்டு விழுந்த பயங்கர விபத்தில் 11 பேர் பலியாக சுமார் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 9.15 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. லோரானிலிருந்து பூஞ்ச் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. பக்கத்தில் கிடுகிடு பள்ளம். அப்போது பேருந்து தடம் மாறி அந்தப் பெரிய பள்ளத்தில் உருண்டது. பேருந்து சுக்குநூறாக உடைந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாக ஏ.என்.ஐ. செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் 11 பேர் பலியாக, 19 பேர் படுகாயம் அடைந்ததில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து இன்னும் விவரங்கள் வரவுள்ளன.
முக்கிய செய்திகள்
வணிகம்
44 mins ago
விளையாட்டு
1 hour ago
தொழில்நுட்பம்
2 hours ago
சினிமா
3 hours ago
க்ரைம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
4 hours ago
க்ரைம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago