டெல்லியில் மனைவியுடன் ஏற்பட்ட தீராச்சண்டையில் வெறுப்படைந்து, ஆத்திரத்தில் தன் 7 வயது மகனைக் கொலை செய்த தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.
துவாரகா பாபா ஹரிதாஸ் நகரில் இந்த நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. சிறுவனின் உடலை வீட்டிலிருந்து கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சிறுவனின் தாயார் கூறும்போது, பக்கத்து வீடுவரை சென்று திரும்பி வந்த போது தன் மகன் பேச்சு மூச்சற்று கிடந்தததாகவும் அவன் கழுத்தில் கயிறு சுற்றியிருந்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குற்றவாளித் தந்தை ரூ.2 லட்சம் வரை கடன் வைத்திருந்தார். தன் பணக்கஷ்டங்களுக்கு மனைவியும் மகனுமே காரணம் என்று அவர் நீண்ட நாட்களாக தினமும் சண்டை போட்டு வந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளித் தந்தைக்கு வலை வீசியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தால் துவாரகா பாபா ஹரிதாஸ் நகர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஆன்மிகம்
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago