மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சராக உள்ள எம்.ஜே.அக்பர் தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மீது சில பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். சிஎன்என் பெண் நிருபர் ஒருவரும் அமைச்சர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் தரப்பிலோ, மத்திய அரசு தரப்பிலோ இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் எம் ஜே.அக்பர் இன்று டெல்லி திரும்புகிறார். இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:
அமைச்சர் அக்பர் மீதான புகார் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் இனிமேலும் அமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. எனினும் இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிதான் இறுதி முடிவு எடுப்பார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பத்திரிகையாளரான எம்.ஜே.அக்பர் பல்வேறு ஊடகங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
5 mins ago
விளையாட்டு
59 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago