தஞ்சாவூரைச் சேர்ந்த ஐஎஸ் ஆதரவாளர் டெல்லியில் கைது

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஷபிக் அகமது என்ற ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரமாக செயல்பட்டுவரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த தமிழகத்தைச் சேர்ந் ஷாஜகான் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். துருக்கியில் கைது செய்யப்பட்ட ஷாஜகான் அந்நாட்டு அதிகாரிகளால் டெல்லியில் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து சில நாட்களில் சென்னையில் நடந்த சோதனையில் முகமது முஸ்தபா என்ற மற்றொருவர் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. முகமது இஸ்மாயில் முகைதீன் என்ற பெயரில் 2017-ம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் ஷாஜகான் மேற்காசியா சென்ற விவரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்தது ஆதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஷபிக் அகமது என தெரிய வந்தது. இதையடுத்து அவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஒரு வாரகாலம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 mins ago

விளையாட்டு

38 mins ago

இணைப்பிதழ்கள்

50 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்