கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கக் கோரி இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபரிமலை கோயிலுக்குச் செல்லும் உரிமை அனைத்து வயதுப் பெண்களுக்கும் உள்ளது என தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தீர்ப்பை எதிர்த்து வரும் ஏராளமான ‘‘பெண்கள் 50 வயது வரை காத்திருக்க தயார்’’ எனக் கூறி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். கேரளாவில் பல்வேறு இடங்களில் பெண்கள் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோட்டயம், சங்கனாச்சேரி, ஆரண்மூலா உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சங்கனாச்சேரியில் நேற்று நடந்த பேரணியில் முஸ்லிம் லீக் கட்சியினரும் பங்கேற்றனர்.
இந்தநிலையில், பந்தளம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகம் வரையிலும் 5 நாட்கள் தொடர் பேரணி நடத்த பாஜக, இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
ஐயப்பன சேவா சங்கம், பக்தர்கள் பேரமைப்பு, என்எஸ்எஸ் எனப்படும் நாயர் சர்வீஸ் சொசைட்டி உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த பேரணி பந்தளத்தில் இருந்து இன்று தொடங்கியது. பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை மற்றும் பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி தலைமையில் இந்த பேரணி நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் ஐதீகத்தை காப்பாற்றக்கோரியும், உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பியபடி பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதனிடையே சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருவனந்தபுரத்தில் இன்றும் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது, களக்கூட்டத்தில் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வீட்டை பாஜக தொண்டர்கள் முயன்றனர். போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago