சியாச்சினில் காணாமல் போன வீரரின் உடல் 18 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சியாச்சின் பனியாறு பகுதியில் காணாமல்போன இந்திய வீரரின் உடல் 18 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் ராஜ புத்திரர் படைப்பிரிவில் பணியாற்றி வந்த, ஹவில்தார் கயா பிரசாத், கடந்த 1996-ம் ஆண்டில் சியாச்சின் பனியாறு பகுதியில் காணாமல் போனார். அவரை தேடும் பணியில் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் அவரது உடல் சியாச்சின் பகுதியில் சில நாள்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. பனிக் கட்டியில் புதைந்திருந்த அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இப்பகுதியில் வெப்பநிலை பெரும்பாலும் உறைநிலைக்கு கீழ் இருப்பதால் கயா பிரசாத்தின் உடல் 18 ஆண்டுகளாக கெட்டுப் போகாமல் இருந்தது.

இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான, உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரிக்கு புதன்கிழமை அனுப்பி வைக் கப்பட்டது. உலகின் மிக உயர்ந்த போர்முனைப் பகுதியான சியாச் சினில், வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. குளிர் காலத்தில் இந்த வெப்பநிலை மேலும் குறை கிறது. கோடைக்காலத்திலும் இங்கு இரவுநேர வெப்பநிலை உறைநிலைக்கு கீழ் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

வாழ்வியல்

56 mins ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்