கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தடியடி: உதவி கமிஷனரிடம் ஜேஎன்யூ மாணவர்கள் புகார்

By பிடிஐ

கேரள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ஜேஎன்யூ மாணவர்கள் மீது தடியடி பிரயோகம் நடத்தப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கேரள வெள்ளத்தை ஏன் தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது கேள்வி எழுப்பினர்.

இப்போராட்டத்தைக் கலைக்கமுற்பட்ட போலீஸார் மாணவர்களை மோசமாக நடத்தியதாகவும் அவர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து புகார் ஒன்றை புதுடெல்லி காவல் துணை ஆணையருக்கு புகார் ஒன்றை ஜேஎன்யூ மாணவர் யூனியன் அளித்தது. போராட்டத்தின்போது மாணவிகளை மிகவும் இழிவான வார்த்தைகளால் போலீஸார்கள் பேசியதாகவும், சில மாணவர்களுக்கு எதிராக போலீஸார் இனவெறி கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும் புகாரில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை மறுத்துள்ள போலீஸார், மாணவர்களை நாங்கள் மோசமாக நடத்தவில்லை என்றும் குற்றஞ்சாட்டுவதற்கான காரணங்களை அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் நாடாளுமன்ற வீதி காவல்நிலையத்தில் ஒருமணிநேரம் சிறையில் அடைத்துவைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்