கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் அம்மாநில அரசுக்கும், பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திற்கும் விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியதாவது:
கேரளா, குடகிற்கு அடுத்து பெங்களூருவில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வருகிற செப்டம்பர் வங்காள விரிகுடா கடலில் உருவாகும் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலத்தால் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒரு நாளுக்கு 80 மில்லி மீட்டர் மழை பெய்தால் பெங்களூருவில் வெள்ளம் ஏற்படாமல் சென்று விட வாய்ப்பிருக்கிறது. அதை விட அதிகமாக மழை பெய்தால், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கர்நாடக அரசும், பெங்களூரு மாநகராட்சி நிர்வாகமும் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கி விட வேண்டும். இவ்வாறு பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின் மேயர் சம்பத் ராஜ், “பெங்களூரு மாநகரில் உள்ள 633 கழிவுநீர் சாக்கடைகளையும் கண் காணித்து தூர்வார உத்தரவிடப் பட்டுள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுலா
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
6 hours ago