மகளின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தவர் சொந்த தம்பிகளால் சுட்டுக்கொலை

By பிடிஐ

தனது மகளின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தவரை அவரது சகோதரர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

முசாபர்நகர் அருகே சல்லா கேடி கிராமத்தில் நேற்றிரவு மனோஜ் குமார் (55) என்பவர் வீட்டில் குடும்ப சண்டை நடந்துள்ளது. இதில் அவரது தம்பிகள் இருவர் அண்ணனை சந்திக்க வந்துள்ளனர். அவரது மகள் சமீபத்தில் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டது குறித்து அவர்கள் விவாதம் செய்ததாக தெரிகிறது.

இதில் சாதாரண பேச்சு வார்த்தை ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் கைகலப்பாக மாறியது. இச்சண்டையில் மனோஜ் குமாரின் தம்பிகள் இருவரும் துப்பாக்கியால் அவரைச் சுட்டுக்கொன்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவரில் ஒருவர் இச்சம்பவத்தில் நடந்த சண்டையின்போது பலத்த காயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் உள்ளார். இரண்டு சகோதரர்களின்பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்