புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களின் அன்பு வலிமையைத் தருகிறது: சோனாலி பிந்த்ரே கருத்து

By செய்திப்பிரிவு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ரசிகர்களின் அன்பு தனக்கு வலிமையை தருவதாக சிகிச்சை பெற்றுவரும் நடிகை சோனாலி பிந்த்ரே தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே, தமிழில் ‘காதலர் தினம்’ படத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். சமீபத்தில் அவருக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இதை ட்விட்டரில் தெரிவித்த சோனாலி பிந்த்ரே, இதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். அவர் விரைவில் குணமடைய திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் புதிய பதிவையும் தனது புதிய புகைப்படத்தையும் சோனாலி பிந்த்ரே வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டவர்கள் பற்றி ரசிகர்கள் எனக்கு அனுப்பிய விவரங்கள் எனக்கு கூடுதலான பலத்தையும் தைரியத்தையும் அளிக்கிறது. முக்கியமாக நான் மட்டுமே தனியாக இல்லை என்பதை அறிய முடிகிறது. ரசிகர்களின் அன்பு எனக்கு வலிமையைத் தருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

இந்தியா

54 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்