உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள லாலா லஜபதி ராய் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 2 நாட்களில் 5 முதியவர்கள் இறந்தனர்.
“ஏசி இயந்திரம் கடந்த சில நாட்களாக இயங்கவில்லை. இதுவே உயிரிழப்புக்கு காரணம்” என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரியின் கீழ் இந்த மருத்துவமனை செயல்படுகிறது. மருத்துவக் கல்லூரி முதல்வர் நவ்னீத் குமார் கூறும்போது, “ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது உண்மைதான். ஆனால் கோளாறு சரிசெய்யப்பட்டது. உடல்நல பாதிப்பு காரணமாகவே நோயாளிகள் இறந்தனர்” என்றார்.
நோயாளிகள் 5 பேர் இறந்த தகவல் அறிந்த ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
ஜோதிடம்
13 hours ago