வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடைகளைக் கண்காணிக்கும் இணையதள வசதியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகள் வருகின்றன. இந்த நன்கொடைகளையும் அவைகளைப் பெற்றுக் கொள்ளும் அமைப்புகளையும் கண்காணிப்பதற்கான இணையதள வசதியை மத்திய அரசு நேற்று தொடங்கி உள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த இணையதள வசதியை தொடங்கிவைத்தார்.
அப்போது அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் நன்கொடைகளைக் கண்காணிக்கும் இணையதள வசதியை மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்களின் முக்கிய அதிகாரிகள் செயல்படுத்த முடியும். வெளிநாட்டு நன்கொடைகள், அவற்றை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், ஆகியவை குறித்த விரிவான தகவல்களை அறிந்துகொள்ள முடியும். மத்திய அரசின் பதிவு பெற்ற அல்லது வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறை சட்டம் 2010-ன் படி செயல்படும் நிறுவனங்கள் இந்த நன்கொடைகளை பெறுகிறதா என்பதைக் கண்காணிக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
28 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago