மேஜர் மனைவி கொலை வழக்கு: ராணுவ அதிகாரியின் தோழியிடம் விசாரணை

By செய்திப்பிரிவு

டெல்லியில் ராணுவ மேஜராக பணியாற்றியவர் அமித் திவிவேதி. இவரது மனைவி ஷாயில்ஸா, சில தினங்களுக்கு முன்பு டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பான விசாரணையில், அமித்தின் நண்பரும் ராணுவ மேஜருமான நிகில் ராய் ஹண்டா என்பவரே இந்தக் கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தலைமறைவாகி இருந்த அவரை போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர். அப்போது, ஷாயில்ஸாவுடன் தமக்கு தகாத உறவு இருந்ததாகவும், அதனைத் தொடர அவர் அனுமதிக்காததால் அவரை கொலை செய்ததாகவும் மேஜர் நிகில் ராய் வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில், ஷாயில்ஸாவை தான் கொலை செய்ததை தமது நெருங்கிய தோழி ஒருவரிடம் நிகில் ராய் கூறியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்