காவிரி ஆணைய இடைக்கால தலைவர் மசூத் உசேன்

By இரா.வினோத்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால‌ தலைவராக மத்திய நீர் ஆணைய தலைவர் மசூத் உசேன் நியமிக்கப் பட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய நீர் வளத்துறை செயலாளர் யு.பி.சிங் கூறும்போது, “கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையில் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டது. அதன்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை கடந்த ஜூன் 1-ம் தேதி அமைத்தது. அதன் தற்காலிக தலைவராக நான் இருந்தேன்.

இந்த மேலாண்மை ஆணை யம் தனது பணியை தொடங்கும் வகையில், இடைக்கால தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில் அங்கம் வகிக்கும் மாநிலங்களின் பிரதிநிதிகளை தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் பரிந்துரை செய்துள்ளன. மற்ற இரு மாநிலங்களும் பரிந்துரை செய்ய வேண்டி உள்ளது. உறுப்பினர்கள் நியமனம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.

ஆணையத்தில் 9 உறுப்பினர்கள் இடம்பெறுவர். இதில் 2 முழுநேர, 2 பகுதிநேர உறுப்பினர்கள், 4 மாநிலங்களிலிருந்தும்மத்திய அரசு சார்பிலும் தலா ஒருவர் பகுதிநேர உறுப்பினர்களாக இடம்பெறுவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

21 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

35 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தொழில்நுட்பம்

48 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

56 mins ago

இந்தியா

1 hour ago

மேலும்