கேரளாவிலிருந்து காணாமல் போன 11 பேருக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பா?

By ஏஎன்ஐ

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் இரு குடும்பங்களிலிருந்து 11 பேர் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:

காணாமல்போனவர்கள் அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதற்கு சென்றுள்ளார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து காணாமல் போன இந்த 11 பேரில் குழந்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது.

இரு ஆண்டுகளுக்கு முன்பே காசர்கோடு மாவட்டத்திலிருந்து ஒரு பிரிவினர் காணாமல் போனது கண்டறியப்பட்டு அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கேரளாவில் கண்ணூரைச் சேர்ந்தவர் ஷாஜகான் வெல்லுவா ,ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் டெல்லி வந்தபோது கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்