மும்பை பிரபாதேவி பகுதியில் நடிகை தீபிகா படுகோனேயின் வீடும், அலுவலகமும் அமைந்துள்ள 34 அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் உள்ள 34 அடுக்கு கொண்ட குடியிருப்பில் 33-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று நண்பகல் 2 மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த குடியிருப்பில்தான் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேயின் வீடும், அலுவலகமும் அமைந்திருக்கிறது.
ஆனால், குடியிருப்பு பகுதியில் தீவிபத்து நடக்கும் போது நடிகை தீபிகா படுகோனே அங்கு இல்லை. தீபிகா வசிக்கும் வீடு ஒரு தளத்திலும், அலுவலகம் ஒரு தளத்திலும் தனித்தனியாக அமைந்துள்ளன.
தீவிபத்து ஏற்பட்டதும் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த மாடியில் இருந்து ஏறக்குறைய 90க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர். இதில் எந்தவிதமான உயிர்சேதமும் ஏற்படவில்லை.
இந்த தீவிபத்து குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
26 mins ago
விளையாட்டு
53 mins ago
விளையாட்டு
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago