ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகள் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் இருந்து தீவிரவாத அமைப்புகள் ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

ராஜ்நாத் தனது மக்களவை தொகுதியான லக்னோவில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு இடையே அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை மத்திய அரசு இனிமேலும் பொறுத்துக்கொள்ளாது. தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப் படும். அம்மாநிலத்தில் அமைதி திரும்பச் செய்வதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும். காஷ்மீரில் தீவிரவாத செயல்களை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவருவதில் நரேந்திர மோடி அரசு உறுதியாக உள்ளது. தீவிரவாத அமைப்புகளின் சதித் திட்டங்களை முறியடிப்பதில் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

காஷ்மீரில் வன்முறைகள் அதிகரிப்பு காரணமாக, மக்கள் ஜனநாய கட்சி (பிடிபி) அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக நேற்று முன்தினம் திரும்பப் பெற்றது. இதையடுத்து முதல்வர் மெகபூபா பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. -ஐஏஎன்எஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

23 mins ago

விளையாட்டு

41 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்