இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள்: திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி 2 ஆண்டுக்கு ஒரு முறை, 2 பிரம்மோற்சவங்கள் நடத்துவது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தலைமையில் அனைத்து துறை தலைமை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதன் பின்னர் அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு திருமலையில் 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் முதலாவதாக, வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. கருட சேவை 17-ம் தேதி இரவு நடத்தப்படுகிறது. 18-ம் தேதி தங்க ரதம், 20-ம் தேதி தேர்த் திருவிழா மற்றும் 21-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அக்டோபர் 10-ம் தேதி முதல், 18ம் தேதி வரை 2-வதாக நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதில் அக்டோபர் 14-ம் தேதி கருட சேவை, 17-ம் தேதி தங்க தேர் ஊர்வலம், 18-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும்

இவ்வாறு ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.

ஏழுமலையானை தரிசிக்க ரம்ஜான் விடுமுறையிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. மேலும், வெயில் காரணமாக ஆந்திராவில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. எனவே, நேற்று திருமலையில் மீண்டும் கூட்டம் அதிகரித்தது. நேற்று சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்க 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

11 mins ago

இந்தியா

35 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்