வாஜ்பாய் உடல்நிலையில் முன்னேற்றம்: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

By செய்திப்பிரிவு

சீறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்று, மூச்சுத் திணறல் காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா நேற்று கூறியதாவது:

வாஜ்பாயின் உடல் நிலை யில் 48 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். சிறுநீர் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சுவாச உறுப்புகள் செயல்பாடு, இதயத் துடிப்பு ஆகியவை இயல்பாக உள்ளன. அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அடுத்த சில நாட்களில் வாஜ்பாய் முழு குணமடைவார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு டாக்டர் ரந்தீப் குலேரியா கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

45 mins ago

க்ரைம்

59 mins ago

இந்தியா

20 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்