சீறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்று, மூச்சுத் திணறல் காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா நேற்று கூறியதாவது:
வாஜ்பாயின் உடல் நிலை யில் 48 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். சிறுநீர் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், சுவாச உறுப்புகள் செயல்பாடு, இதயத் துடிப்பு ஆகியவை இயல்பாக உள்ளன. அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அடுத்த சில நாட்களில் வாஜ்பாய் முழு குணமடைவார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு டாக்டர் ரந்தீப் குலேரியா கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
45 mins ago
க்ரைம்
59 mins ago
இந்தியா
20 mins ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago