சத்தீஸ்கர் மாநிலம் ரஜ்நந்த்கான் மாவட்டத்தில் பொர்தாலாவ் வனப்பகுதி உள்ளது. இங்கு நக்சல்கள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன்பேரில், நேற்று காலையில் அப்பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சல்கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீஸாரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சண்டையில் நக்சல் படை துணைக் கமாண்டரான ஆசாத் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், நக்சல்களுக்கு உதவி செய்வதற்காக வந்திருந்த உள்ளூர்வாசிகள் இருவரும் இந்த மோதலில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தப்பியோடிய நக்சல்களைப் பிடிப்பதற்காக சிஆர்பிஎப் படையினரும், போலீஸாரும் இணைந்து பொர்தாலாவ் வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். - பிடிஐ
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
3 hours ago
உலகம்
4 hours ago