கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி ஏற்றதை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் தாக்கல் செய்த வழக்கில், உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், எடியூரப்பா சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்குத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தது.
இதையடுத்து சட்டப்பேரவை கூட்டப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, இடைக்கால சபாநாயகராக போபையா நியமிக்கப்பட்டார். எம்எல்ஏக்கள் இன்று காலை முதல் பதவி ஏற்று வருகின்றனர்.
சபாநாயகராக போபையா நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷான் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அவர்கள் பிறப்பித்த உத்தரவின் 6 அம்சங்கள்:
1. கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் எடியூரப்பா அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்.
2. நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்பும் போதுதான் வெளிப்படைத்தன்மை காக்கப்படும்.
3. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தவிர வேறு எந்தவிமான அலுவல்களும் எடுத்துக்கொள்ளவோ அது குறித்து விவாதிக்கவோ கூடாது.
4. சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் அனைத்தையும், பேரவையின் செயலாளர் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும்.
5. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது அதன் நேரலையைக் கர்நாடகத்தில் உள்ள அனைத்து உள்ளூர் சேனல்களுக்கும் பகிர்ந்தளித்து, ஒரே நேரத்தில் அனைவரும் ஒளிபரப்ப வகை செய்ய வேண்டும்.
6. கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக போபையாவே தொடர்வார்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago