பிரம்மோஸ் ஏவுகணையில் 76 % உள்நாட்டு தொழில்நுட்பம்: ஏவுகணை திட்ட இயக்குநர் பேட்டி

By செய்திப்பிரிவு

பிரம்மோஸ் ஏவுகணையில் 76 சதவீத உள்நாட்டுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று ஏவுகணைத் திட்ட நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சுதிர் மிஸ்ரா தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஏவுகணையான பிரம்மோஸில், சில வெளிநாட்டு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகின் மிக வேகமான சூப்பர்சானிக் வகை ஏவுகணையாகும் இது.

திட்டம் குறித்து அதிகாரி சுதிர் மிஸ்ரா கூறும்போது, “பிரம்மோஸ் ஏவுகணையில் தற்போது 65 சதவீத அளவுக்கு இந்தியாவில் தயாரித்த பொருட்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். அடுத்த 6 மாதங்களில் பிரம்மோஸ் ஏவுகணையில் 76 சதவீத உள்நாட்டுத் தயாரிப்புகள் பயன்படுத்தப்படும்.

அந்த சாதனை அளவை நாங்கள் நெருங்கி வருகிறோம். இந்த ஏவுகணையில் 85 சதவீத உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும் புதிய வகையிலான லாஞ்சரையும் நாங்கள் வடிவமைத்துள்ளோம். இந்த வகை லாஞ்சர்கள் மூலம் 8 ஏவுகணைகளை செலுத்த முடியும். இதைத் தயாரிக்கும் ஆர்டர்களுக்காக நாங்கள் கடற்படையினருடன் தொடர்பில் இருக்கிறோம். தொழில்நுட்பங்களை உருவாக்க ஏராளமான முதலீடு செய்யப்பட்டுள்ளது.

2000-ம் ஆண்டு முதல் பிரம்மோஸ் ஏவுகணை தொழில்நுட்பத் திட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (டிஆர்டிஓ) இணைந்து செயலாற்றி வருகிறோம்” என்றார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

9 mins ago

க்ரைம்

40 mins ago

இந்தியா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்