சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு விவகாரம்: ஆசிரியர் உட்பட 3 பேர் இமாச்சலபிரதேசத்தில் கைது

By செய்திப்பிரிவு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு வினாத்தாள் கசிவு தொடர்பாக இமாச்சலப்பிரதேச பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட 3 பேரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி நடந்தது. அதற்கு முந்தைய 25-ம் தேதி பொருளாதார பாட வினாத்தாள் பல மாநிலங்களில் ‘வாட்ஸ்அப்’பில் கசிந்தது. இதனால் மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வழக்கில் டெல்லியில் சிலர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இமாச்சலப் பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் உள்ள டிஏவி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் (தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றியவர்) ராகேஷ், எழுத்தாளர் அமித், பியூன் அசோக் ஆகியோரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அவர்கள் மூவரையும் உனாவில் இருந்து டெல்லி அழைத்து வந்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பொருளாதார பாட வினாத்தாளை கையால் எழுதி ‘வாட்ஸ்அப்’பில் பரிமாறியது தெரிய வந்தது. அதன்பின் மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இதற்கிடையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதாரப் பாடத்துக்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. .- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

கல்வி

38 mins ago

சுற்றுச்சூழல்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்