குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டம், டிம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ரத்தோட் ( 21). தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் 8 மாதங்களுக்கு முன்பு ஒரு குதிரை வாங்கினார். வயலுக்கு செல்லும்போது குதிரையில் சென்று வந்தார். இதற்கு உயர் வகுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தாழ்த்தப்பட்ட இளைஞர் நடந்து செல்ல வேண்டும். குதிரையில் செல்ல கூடாது என்று மிரட்டல் விடுத்து வந்தனர். கடந்த வியாழக்கிழமை இரவு மர்ம நபர்களால் அவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
அதுகுறித்து பிரதீப் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது மகனுக்கு குதிரை மீது பிரியம் அதிகம். அதுவே அவனது மரணத்துக்கு காரணமாகிவிட்டது. தாழ்த்தப்பட்டோர் குதிரையில் செல்லக்கூடாது. அந்த குதிரையை விற்றுவிடு என்று உயர் வகுப்பினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்தனர்” என்று தெரிவித்துள் ளார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து உயர் வகுப்பைச் சேர்ந்த 3 இளைஞர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago